Sunday 6 March 2016

ஜீவாமிர்தம்:

பசுஞ்சாணம் 10 கிலோ, நாட்டுமாடு சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை போன்ற ஏதாவது ஒன்று)- 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இவற்றுடன், உங்கள் நிலத்தின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, பிளாஸ்டிக் கேன் அல்லது தொட்டியில் போட்டு 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். இந்தக் கலவையை மர நிழலில் வைத்திருப்பது முக்கியம். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் கடிகார முள் சுற்றும் திசையில் குச்சியைக் கொண்டு கலக்கி வந்தால், ஜீவாமிர்தம் தயாராகிவிடும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.
இதை பாசன நீரில் கலந்துவிட்டோ... தெளிப்பான் மூலமாகவோ கொடுக்கலாம்.
நீம் அஸ்திரா தயாரிக்கும் முறை
நாட்டு மாட்டின் சாணம் 2 கிலோ, சிறுநீர் 10 லிட்டர், வேம்பு இலை மற்றும் அதன் குச்சிகள் 10 கிலோ. இவற்றை பெரிய பாத்திரத்தில்போட்டு 200 லிட்டர் நீரையும் ஊற்றி, 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி வைக்கக்கூடாது. கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் மூன்று தடவை, கலக்கிவிடவேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி, உரிய அளவில் நீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.

No comments:

Post a Comment