Saturday 20 February 2016

களை மேலாண்மை

களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்).
•வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும்.
•அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.
•அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.
•கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.
•பசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.
•ஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.
•கோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.
•கோரையை அழிக்க, அன்னப்பறவையை வயலில் விடலாம்.
•வேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
•1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
•கோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.
•பார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.
•வயலில் தொடர்ந்து நீர் நிற்கும்மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்

No comments:

Post a Comment